வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

364

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று(25.10) காலை மேற்கொண்டனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு, ரஹ்மத்நகர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூடுவெந்தபுலவு பள்ளிவாசல் வரை ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து பாடசாலையை நோக்கி சென்று பாடசாலை முன்றலில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவ் ஊர்வலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பொலிசார், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.