அவசரத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

637

மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப். படிப்பில் எப்பொழுது கெட்டிக்காரியான ரிதி, தன்னுடைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்தததும், எப்படியும் 80 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றி பெற்றிடுவேன் என தோழிகளிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்வு முடிவு வந்ததும், நிதி மேலாண்மை பாடத்தில் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக வந்துள்ளது.

30 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில், 10 மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் ரிதி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

ஆனால் இறப்பதற்கு முன்னர் தோல்வியடைந்த பாடத்தை மட்டும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளார். அதன் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தபோது, ரிதி தேர்ச்சியடைந்திருப்பதாக முடிவு வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிதியின் தந்தை ரமேஷ், வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் என்னுடைய மகள் இறந்துவிட்டாள். இனி அவள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என கவலை தெரிவித்துள்ளார்.