வவுனியாவுக்கு தேசிய ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டையில் மூன்று பதங்கங்கள்!!

1059

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீர, வீராங்கனைகள் நான்கு வெண்கலப் பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.

கொழும்பு சுகதாச விழையாட்டு உள்ளரங்கில் 04.10.2018 நடைபெற்ற தேசிய வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த என்.பிரவீந், க.டிலக்சினி, த.தர்சிகா வினோதினி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த எஸ்.சுதர்ஜனா ஆகியோர் கண் போய்ஸ் விழையாட்டுக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.

இக் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்கான நிதி உதவியினை முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சிறி அம்பாள் மோட்டர்ஸ் உரிமையாளர் எஸ்.சதீஸ் மற்றும் வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கத்தால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வீராங்கனைகள் பாடசாலை மாணவிகள் என்ற வகையில் வவுனியா நகரசபை உறுப்பினர் இ.ராஜலிங்கம் மற்றும் வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் த.சிறிஸ்கந்தராஜா ஆகியோரால் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.