வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது!!

695

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மடுகந்தை பொலிஸ் காவலரண் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12 மணியளவில் குடாகச்சக்கொடிய பகுதியில் உள்ள வீ டொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த 20 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததுடன் கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.