வவுனியா சேமமடு கிராமத்திற்கு அயல் கிராமமான பரசங்குளம் கிராமத்தில் இன்று(30.10) அதிகாலை காட்டு யானைகள் கிராமத்தினுள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்தியதுடன் நெற்செய்கை வயல்களையும், வாழை, தென்னை போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
அயல்கிராமமான இளமருதங்குளம் கிராமத்திற்கு மின்சாரவேலி போடப்பட்டிருப்பதால் யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கபடுகிறதாகவும் அதேபோல் தங்கள் கிராமத்திற்கும் யானை வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த மாதம் 20ம் திகதி அயல் கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.