வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்விக் கண்காட்சி!!

435

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி இன்று(30.10) காலை 9.30 மணியளவில் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு அதிபர் திருமதி நா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பல ஆக்கங்கள் கண்காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பிரதம விருந்தினராக சு.அமிர்தலிங்கம் (பிரதிக் கல்விப்பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி வவுனியா தெற்கு கல்வி வலயம்), சிறப்பு விருந்தினராக இ.ராஜ்மோகன் (உதவிக்கல்விப்பணிப்பாளர், வவுனியா தெற்கு கல்வி வலயம்), வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசலையில் பிரதி அதிபர் எம்.முல்லைக்குமரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.