வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு!!

626

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம் (31.10) காலை 9.30 அளவில் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.