வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

604

வவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்றையதினம் (31.10) கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை அவரது வீட்டில் வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் செல்லையா ஜெயபாலசிங்கம் (வயது-50) என்பவரையே கட்டுதுப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.