வவுனியாவில் கடினப்பந்து துடுப்பாட்ட சமர் : வெற்றிக் கிண்ணங்களின் வாகன பவனி!!

1056

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் இடையில் எதிர்வரும் 03.11.2018 அன்று கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி நடைறெவுள்ளது.

இந்துக் கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் நடைபெறவிருக்கும் கடினப்பந்து துடுப்பாட்ட சமருக்கான முன்னேற்பாடாக இன்று 01.11.2018 வெற்றிபெறவிருக்கும் அணியினருக்கு வழங்கப்படவிருக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வாகன பவனியாக புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தின் வாகன பவனியை ஆரம்பித்து வைத்திருந்தார்.

கோவிற்குளம் இந்துக்கல்லூரியில் இருந்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க கல்லூரியின் துடுப்பாட்ட அணியினரால் வாகன பவனியாக வெற்றி கிண்ணங்கள் வவுனியா மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இம் மாபெரும் கடினப்பந்து துடுப்பாட்ட சமரானது எதிர்வரும் 03.11.2018 அன்று தெற்கு மற்றும் வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர்களான மு.ராதாகிருஸ்ணன், திருமதி எஸ்.அன்னமலர் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.