வவுனியாவில் புகையிரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் பரிதாபமாகப் பலி!!

618

வவுனியாவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஓருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (03.11) மாலை ஓமந்தைக்கும் தாண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த விஜயசீலன் கிறிஸ்ரிதீபன் என்ற 28 வயதுடைய இளைஞன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.