அஜித்துக்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை..!

374

ajithநடிகர் அஜித் குமார் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்றில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என்று நடித்தார் அஜித்.

மும்பையில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியின்போது அஜித் குமாருக்கு காலில் அடிபட்டது. படத்தில் ஆர்யா கார் ஓட்ட அஜித் அதன் முன்னால் நின்று வருவார்.

அந்த காட்சியை படமாக்கும்போது தான் அஜித்தின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனால் அவரோ உடனே அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார். ஆரம்பம், வீரம் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இந்நேரம் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அந்த படங்களை முடித்துவிட்டு செய்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்

ஆரம்பம் வெளியாகிவிட்டது. வீரம் பொங்கலுக்கு தாயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிசம்பர் மாதத்துடன் படமாக்கப்பட்டுவிடும். இதையடுத்து அவர் டிசம்பரிலேயே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அஜித் 2 மாதங்கள் ஓய்வில் இருப்பார். அதன் பிறகு பெப்ரவரி மாதம் 15ம் திகதி தொடங்கும் கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.