சிம்புவின் திடீர் ஓய்வுக்கு காரணம் நயன்தாராவா?

329

simbuபாண்டிராஜ் படத்தில் மீண்டும் நல்ல நண்பர்களான சிம்புவும் நயன்தாராவும் ஜோடியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஒருவித பரபரப்பு காணப்படுகிறது திரையுலகத்தில்.

ஆனால் திரையுலகினர் எதிர்பார்த்ததை விட சில விவகாரங்கள் வேகமாகவே நடக்கின்றன.

சிம்பு-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால், சிம்புவின் கால்ஷீட் கிடைக்குமோ என்னவோ என்று தன் படத்திற்கான படப்பிடிப்பை வேகமாக நடத்திக்கொண்டிருந்தார் கௌதம் மேனன்.

ஜனவரி வெளியாகும் என்பதால் ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் இடையே இடைவெளி விடாமல் படப்பிடிப்பை தொடர நினைத்த கௌதம் மேனன், சிம்பு திடுதிப்பென்று 5 நாட்கள் லீவ் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனதால் டென்ஷனில் இருக்கிறாராம்.

கால்ஷீட் குளறுபடி உட்பட எந்த பிரச்சினையும் இருக்காது என்ற வாக்குறுதி கொடுத்தபின்னரே படப்பிடிப்பைத் தொடங்கிய கௌதம் சிம்புவின் திடீர் விடுமுறைக்கு காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருக்க, நயன்தாராவின் சென்னை வரவு விடுமுறைக்கான மர்மத்தை விலக்கிவிட்டது என்கின்றனர் திரையுலகின்றனர்.

நயன்தாரா வந்துவிட்டதால் தான் சிம்பு லீவில் இருக்கிறார் என்றும், பாண்டிராஜ் படத்திலும், கௌதம் மேனன் படத்திலும் நீண்ட ஷெடியூலில் நடித்ததால் ஹன்ஸிகாவுடனான தன் காதலிலும் சிறு இடைவெளிவிட்டு விட்டதாலும் தான் இந்த விடுமுறை என்கிறது கோடம்பாக்கத்திலிருந்து வரும் தகவல்.

சிம்புவும் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் “ பாண்டிராஜ், கௌதம் மேனன் படங்களில் நீண்ட ஷெடியூலில் நடித்துவிட்டேன். இது ஓய்வுக்கான சமயம். 5 நாட்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.