நீங்கள் அமர்வதை வைத்து உங்களின் குணநலன்களை அறிந்து கொள்ளுங்கள்!!

635


அமரும் நிலை



ஒருவர் அமரும் நிலையானது அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்துவிடுமாம். மேலும் அவர்கள் அமரும் நிலையை வைத்தே அவர்களின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.



முதல் நிலை : முதல் நிலையில் அமருபவர்களின் சிந்தனையானது, பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பது போல இருக்கும். அதை நினைத்து இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், சில சமயம் இப்படியாகிவிட்டதே என்று வருத்தமடைவார்கள். இவர்களிடம் எளிமையாக பழகிவிடலாம்.




இரண்டாம் நிலை : இவ்வாறு அமர்பவர்கள் நிறைய கனவுகளை கொண்டிருப்பார்கள். கற்பனை திறனில் சிறந்து விளங்குவார்கள். நண்பர் கூட்டத்தில் இவர்கள் ஒரு முக்கிய நபராக இருப்பார்கள், புதுப்புது விஷயமாக யோசித்து செய்து கொண்டே இருப்பார்கள்.


மூன்றாம் நிலை : இவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள், வார இறுதி நாட்களை மால்கள் அல்லது தங்களை அழகாக மாற்றிக்கொள்ள பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் ஒரு வாசனை திரவியம் அல்லது க்ரீம்களை தேர்ந்தெடுக்க ஒருநாளையே செலவிடுவார்கள்.

நான்காம் நிலை : இவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள், அறிவானவர்கள் மற்றும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


ஐந்தாம் நிலை : இவர்கள் திருமணத்திற்கு அவசரப்படமாட்டார்கள், முதலில் கல்வி, அடுத்த நல்ல வேலை என அனைத்திற்கும் உரிய நேரம் ஒதுக்குவார்கள். தங்களது இலட்சியங்களை அடைவதில் உறுதியாக இருப்பார்கள்.