முதலிரவு காட்சியில் பிரச்சினை: மீண்டும் சர்ச்சையில் நஸ்ரியா?

317

nasநஸ்ரியா நசீம் என்ற பெயரைச் சொன்னதும் ‘தொப்புளுக்காக பிரச்சினை பண்ணுச்சே… அந்த பொண்ணு தானே’ என நினைவுகூறும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் கோலிவுட்டில்.

சேண்டல்வுட்டிலிருந்து (மலையாளம்) திறமையான நடிப்பின் மூலம் கோலிவுட்டிற்கு வந்தவர், கோலிவுட்டில் நடந்த பிரச்சினையின் மூலம் டோலிவுட்டிற்கு சென்றார்.

தமிழ்த்திரையுலகத்தையே பரபரப்பாக்கிய பிரச்சினை என்பதால் டோலிவுட்டில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதல் படத்திலேயே கிடைத்தது நஸ்ரியாவுக்கு.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் நடித்த காட்சிகள் வரை போட்டுக்காட்டும்படி கேட்டு காட்சிகளைப் பார்த்த நஸ்ரியா அதிலிருந்த முதலிரவுக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துபோனாராம்.

சரி நடந்தது நடந்துருச்சு இந்த காட்சியையெல்லாம் டெலிட் பண்ணிடுங்க என்று நஸ்ரியா சொல்ல இயக்குனர் காட்சியெல்லாம் டெலிட் பண்ண முடியாது. வேண்டுமென்றால் உங்களை டெலிட் செய்யலாம் என்று சொல்லிவிட்டதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயத்தில் நஸ்ரியா இந்த திரைப்படத்தில் நடிக்க பேசப்பட்டார். ஆனால் பேச்சுவார்த்தையின் போதே முதலிரவுக் காட்சி பற்றி கேட்டு நிராகரித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின்றன. உண்மை எது? வதந்தி எது? என அவரே சொன்னால் தான் தெரியும் என்பதால் நஸ்ரியாவின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகம்.

தகவல் அறிந்த இரசிகர்களும் நஸ்ரியாவின் ஃபேஸ்புக் பக்கத்தையே சுற்றி வருகின்றனர்.