வவுனியா ஆச்சிபுரம் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

573

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக மின்சார இணைப்புகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் ஏற்பாட்டில் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 15 வருடங்களாக மீள்குடியேறியிருந்த ஆச்சிபுரம் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி.லிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3 4