72 பெண்கள் உயிரிருடன் எரித்துக் கொலை : ​பெண் பிள்ளைகளை பெற்ற 56 தாய்மார் படுகொலை!!

365

PAKபாகிஸ்தானில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 56 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்பயப்படுவதும் பெண்கள் மீது அசிட் வீசப்படுவதும், அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 90 பெண்கள் மீது அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 72 பெண்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறியதாவது..

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக பெண்கள் கொல்லப்படுவது கண்டனத்திற்குரியது. எந்த ஒரு நாட்டிலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். நாட்டில் பெண் கல்வியின் நிலை மிக மோசமாக உள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.