காதலுக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!!

301

babyபிரான்சில் காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்திற்காக 15 மாத குழந்தையை கடலில் வீசி கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசின் வடக்குபகுதியில் பெர்க்–சர்-மேர் கடற்கறை உள்ளது. இங்கு கடந்த மாதம் 20ம் திகதி பச்சிளம் குழந்தையின் பிணம் கடலில் மிதந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த மீனவர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்த வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டதுடன் தாயை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடலில் அலைகள் வேகமாக வரும்போது குழந்தையை தூக்கி எரிந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.