35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை : மகிழ்ச்சியில் மக்கள்!!

335

babyபிரெஞ்சு தீவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் Ile de Sein என்ற பிரெஞ்சு தீவு ஒன்று உள்ளது.

இத்தீவில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு இங்கு வாழ்பவர்கள் வயதில் முதியவர்கள் என்பதும், இங்கு போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாததுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிரிட்டாலியிலுள்ள நிலப்பகுதியைச் சேர்ந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இத்தீவின் மொத்த மக்கள் தொகை 215 மேலும் இங்குள்ள ஆரம்ப பள்ளி மற்றும் நடுநலைப் பள்ளியில் 7 மாணவர்களே பயில்கின்றனர்.