சம்பளத்தை உயர்த்தினார் ப்ரியா ஆனந்த்

454

முன்னணி நடிகைகள் சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து, இளம் நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.
கொலிவுட், டோலிவுட் என இருமொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

அதை தருவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இளம் நடிகைகள் ஹன்சிகா, அமலா பால், அஞ்சலி போன்றவர்களும் சம்பளம் உயர்த்தி உள்ளனர்.

இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.

தமிழில் வாமனன் படத்தில் நடித்தவர் பின்னர் சித்தார்த்துடன் நூற்றெண்பது படத்திலும், ஸ்ரீதேவியுடன் இங்லிஷ் விங்லிஷ் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த், தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம்.

படத்துக்கு மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழாவுக்கு வருவதற்கும் நடிகைகள் குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர். அதற்கான கட்டணத்தையும் பிரியா ஆனந்த் உயர்த்திவிட்டாராம்.