வவுனியா முன்னாள் வர்த்தக சங்க தலைவர் P.S.அப்துல்லா காலமானார் : வவுனியாவில் கடைகள் அனைத்தும் அரைநாள் மூடப்படும்!!

328

13_11_06_vavuniya_02_58294_435வவுனியா முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் P.S.அப்துல்லா இன்று காலை கேரளாவில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் கடைகள் அனைத்தும் இன்று அரைநாள் மூடப்படும்.

இது தொடர்பாக வவுனியா நெற் இணையம் தற்போதய வர்த்தக சங்கத் தலைவர் கே.ராஜலிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது..

மறைந்த முன்னைநாள் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் P.S.அப்துல்லா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் அனைத்து கடைகளையும் இன்று அரைநாள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும், கடைகளின் முன்னால் வெள்ளைக் கொடியை ஏற்றி வைக்குமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.