பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியை கைது!

782

Teacherபிரித்தானியாவில் பள்ளி ஆசிரியவர் ஒருவர் பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிரியராக பணிபுரியும் லாரா(47) என்ற பெண்மணி தனது வகுப்பில் பயிலும் 17 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இதுகுறித்து மாணவனின் உறவினர்கள் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் லாராவை கைதுசெய்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து லாரா கூறுகையில், கடந்த ஒரு வருடகலாமாக ஆசிரியர் மாணவன் என்ற உறவு தான் எங்களுக்குள் இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் அது பாலியல் உறவாக மாறியது என்றும் அம்மாணவனை நான் எனது துணையாக ஏற்றுகொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது.