சீனாவில் உள்ள சொங்குயிங் நகரில் 25 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. சம்பவத்தன்று இங்கு தங்கியிருக்கும் 10 வயது மாணவி பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது பால்கனியில் 18 மாத ஆண் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மாணவி சிரித்தாள்.
ஆனால் அந்த குழந்தை சிரிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவள் அந்த குழந்தையை தூக்கி 25வது மாடியில் இருந்து கீழே வீசினாள்.
இதனால் தரையில் விழுந்த அக்குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. ஆனால் உடலில் படுகாயம் ஏற்பட்டது. எனவே அக்குழந்தைக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.