வவுனியா கற்குளத்தில் நிலத்தை அபகரிக்க யானைகள்!!

431

eleவுவனியா கற்குளம் பகுதியில் யானைகள் கொண்டு சென்று விடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியுள்ள பெரும்பான்மையினரே இவ்வாறு யானைகளை கொண்டு சென்று இறக்குவதாக கற்குள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த யானைகள் கிராமத்திற்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கற்குளமக்கள் குறிப்பிடுகின்றனர். தமது கிராமத்தினை அபகரிக்கவே இவ்வாறு மேற் கொள்ளப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதியை அண்டி குடியேற்றப்பட்ட கஜபாகுபுரம் போன்ற பகுதிகளிலிருந்தே இவ்வாறு யானைகள் கொண்டு சென்று விடப்படுகின்றன. காட்டு யானைகளை காடுகளில் இருந்து எடுத்துச் சென்று இந்தப் பகுதியில் விடப்படுகிறது.

கடந்த பல வருடங்களாக மக்கள் இல்லாமல் இருந்த கிராமங்கள் காடு மண்டிக் காணப்படுகிறது. காடுகள் அழிக்கப்பாடத நிலையிலேயே மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள யானைகள் இரவுவேளைகளில் மக்களின் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.