வவுனியாவில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியவர் பொலிஸாரால் கைது!!

349

arrest1வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமத்தில் மக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இம் மக்களிடம் 4500 ரூபா வீதம் 20 பேரிடம் பணத்தை பெற்றிருந்த நாகர்இலுப்பைக்குளத்தை சேர்ந்த ஒருவர் கடன் வழங்குவதாக கூறி சிலரிடம் தொடர்பு கொண்டு 46100 ரூபாவுடன் ஓமந்தைக்கு வருமாறு தெரிவத்திருந்த நிலையில் கடன் கிடைக்கும் என எதிர்பார்த்த வந்தவர்களில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து ஓமந்தை பொலிஸ் புலனாய்வாளர்கள் இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஓமந்தை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேசத்தில் பலரும் கடன் வழங்குவதாக தெரிவித்து அங்குள்ள மக்களை ஏமாற்றி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அறிவித்துள்ளதுடன் அரசினால் அங்கரிக்கப்பட்ட வங்கிகளில் மாத்திரம் பண வைப்புகளை மேற்கொள்வதுடன் கடன் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ளார்.

IT Solution AD