சாரதியின் பொறுப்பின்மையினால் இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

307

இளம்பெண் பரிதாபமாக மரணம்

கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதி இல்லாமையினால் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடபில கிராமிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நவநுவர வீதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதுண்டமையினால் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளர் காவு வண்டி தாமதம் அடைந்தமையினால் காயப்பட்டிருந்த மகள் உயிரிழந்துள்ளார்.

நோயாளர் காவு வண்டியின் சாரதி குடிபோதையில் இருந்தமையினாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தனர். எனினும் பொலிஸார் சம்பவத்திற்கு சென்று பதறத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆரம்ப பாடசாலை ஆசிரியரான 24 வயதான பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.