வரலாற்றில் முதன் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்!!

344

vaalவிண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசேட்டா என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

இது 3 தடவை பூமியின் புவி வட்ட பாதையிலும், செவ்வாய் கிரகத்தையும் சுற்றி சென்றுள்ளது. பல லட்சம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள இந்த விண்கலம் 2 விண்கற்களை தாண்டியும் பயணம் செய்துள்ளது.

இந்த நிலையில் இது 67-பி களியுமோல் ஜெராசி மென்கோ என்ற வால் நட்சத்திரத்தையும் கடந்து சென்றது. அதை பார்த்த விஞ்ஞானிகள் அந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்தில் ரொசேட்டா விண்கலத்தை தரை இறங்கும் என எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் ரொசேட்டா விண்கலம் அடுத்த ஆண்டு அதாவது வருகிற 2014ம் ஆண்டில் நவம்பர் 11ம் திகதி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என துல்லியமாக கணக்கிட்டு அறவித்துள்ளனர்.
அது குறித்து ரொசெட்டா விண்கல திட்ட விஞ்ஞானி மட்டெல்வர்கூறியதாவது..

இது போன்று அதற்கு முன் நடைபெற்றதில்லை. அதுபோன்று நடப்பதற்கு பல தடைகள் ஏற்படும். இதில் அதையெல்லாம் கடந்து ரொசேட்டா விண்கலம் குறிப்பிட்ட நாளில் அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என தெரிவித்துள்ளார்.