வவுனியா நகரசபையின் பணியை கையிலெடுத்த வவுனியா பொலிசார்!!

813

வவுனியா பொலிசார்

வவுனியா புதிய பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியை சுற்றிய  இடங்களை துப்பரவு செய்யும் பணி வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராட்சி தலைமையில் இன்று (31.03) காலை 8.30மணி தொடக்கம் 10 மணி வரை இடம்பெற்றது.

வவுனியா பொலிஸார், சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியில் சுமார் 40க்கு மேற்பட்ட பொலிஸார் கலந்து கொண்டனர்.

இச் சிரமதானப் பணியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, 40ற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.