பொதுக்கூட்டம்

வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நேற்று (31.03) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

அதிதிகளுக்கு மாலை அணிவித்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது. வவுனியா மாவட்டத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சமாதான நீதிமான்கள் இப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தலைவராக ந. ஸ்ரீஸ்கந்தராசா, செயலாளராக மாணிக்கம் ஜெகன், பொருளாளராக எஸ்.சபாநாதன் மற்றும் பத்து நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தில் வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி பீ.ஜெயவிந்தன், வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் செயலாளர் கலாநிதி நி.திசையானந்தன், சமாதான நீதிமான் ஸ்ரீமான் மு.சு.கணேஸ்வரன், சந்திரகுமார் கண்ணன், வவுனியா நகரத்தின் கிராம உத்தியோகத்தர் எஸ்.பி.உமாபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.





