வவுனியாவில் பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி!!

554

கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி

வவுனியா – பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு அருகில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரையே கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 15.5 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 31 வயதான வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சிக்கியுள்ளதுடன், சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.