வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!!

533

குடிநீர் விநியோகம்

வவுனியாவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் வறட்சியான காலநிலை நீடித்து வருகின்ற நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய கிராமங்களில் 225 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன. இம் மக்களுக்கு நாள் தோறும் 4000 லீற்றர் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரு கிராமங்களிலும் 4 நீர்தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேசத்தில் காஞ்சுரமோட்டைப் பகுதியில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வறட்சியினால் 39 பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து அவர்களுக்கான குடிநீரை விநியோகித்து வருகின்றது.