வீதியை விட்டு விலகிய ஜீப் வண்டி : இளைஞர் பலி, ஆறு பேர் படுகாயம்!!

567

இளைஞர் பலி

அநுராதபுரம் – ராம்பேவே – கினிகட்டுவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்துள்ளவர் அநுராதபுரம் – கோனேவ பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ராம்பேவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.