48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி : முதல்முறையாக வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்!!

636


சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி



வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதுவும் இரண்டு கருந்துளைகளை கண்டறிந்துள்ளனர்.



நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை. இதுகுறித்து வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து, அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.




இது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி, அதில் வெள்ளை நிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.


18ஆம் நூற்றாண்டு முதல் கருந்துளைகள் குறித்து வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஒருமுறை கூட தொலைநோக்கியில் கருந்துளை தென்படவில்லை. இந்நிலையில் தற்போது இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, M87 என்ற கேலக்ஸியில் இருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனை பல்வேறு ரேடியோ தொலைநோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர். இந்த கருந்துளை இருக்கும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்.


மற்றொரு கருந்துளை சகிட்டரியஸ் ஏ ஆனது, நாம் வாழும் புவியில் இருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. குறிப்பாக நாம் வாழும் பால்வளித்திரளின் மையப்பகுதியில் உள்ளது. இது ஈவண்ட் ஹாரிசன் டெலஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அற்புதமான விஞ்ஞான சாதனை என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வானியல் அறிஞர் பால் மெக்நமரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2017ல் இருந்து தொடர்ச்சியாக 8 ரேடியோ தொலைநோக்கிகள் ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, தென் முனைப் பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டு சகிட்டரியஸ் ஏ, M87 ஆகிய கருந்துளைகளை படம்பிடித்துள்ளன.