மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தமிழர் வெற்றி!!

321

mr_srilankaமிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் இம்முறை தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளார். மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டி நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக 66வது வருடமாக இடம்பெறும் இந்த ஆணழகன் போட்டியில் 125 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். இந்தப் போட்டியில் கட்டான பலமேன் ஸ்போர்ட்ஸ் கழகத்தைச் சேர்ந்த அன்டன் புஸ்பராஜா சகல துறைகளிலும் வெற்றி பெற்றதன் பொருட்டு மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவானார்.

2ம் இடத்தை கடற்படையைச் சேர்ந்த சுபாஸ் சிறிவர்த்தனவும் மூன்றாம் இடத்தை இராணுவத்தைச் சேர்ந்த யூ.ஜே.அமிலவும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா, அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் விளையாட்டுத்துறை இயக்குனர் ரஞ்சனி ஜெயக்கொடி ஆகியோர் வழங்கி வைத்தனர்.