இலங்கையை உலுக்கிய கோர விபத்து : உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட பொலிசார்!!

504

இலங்கையை உலுக்கிய கோர விபத்து

பதுளை, மஹியங்கனை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.