வீடு திரும்பிய கணவருக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

796

மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

பக்கமுன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாவ பகுதியில் உணவு உட்கொள்ளாது அதிக மதுபோதையில் இருந்ததன் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

56 வயதான ஹெட்டியாரச்சிலாகே விமலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமலாவதி கணவரைப் பிரிந்து வேறும் ஓர் நபருடன் வாழ்ந்து வருவதாகவும், இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற தினம் விமலாவதியின் கணவர் பணிக்காக சென்று வீடு திரும்பிய போது, வீட்டில் விமலாவதி உயிரிழந்திருந்ததனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உணவு எதனையும் உட்கொள்ளாது அதிகளவில் மதுபானம் அருந்திய காரணத்தினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மரண விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.