மன்னாரில் இடி, மின்னல் தாக்கத்தால் வீடொன்று முற்றாக சேதம்!!

332

வீடொன்று முற்றாக சேதம்

மன்னார் – மேற்கு மாந்தை, வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று மாலை இடி, மின்னல் தாக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

இருப்பினும் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதன பொருட்கள், உடைகள் உட்பட ஏனைய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.