மட்டக்களப்பில் நடந்த சோகம் : இளம் பெண் சடலமாக மீட்பு!!

243

இளம் பெண் சடலமாக மீட்பு

தமிழர் பகுதியான மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், 25 வயதான பிரகாஸ் லபோஜினியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது தாயை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் பதுளையில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரை நேற்று காலை வீட்டின் முன்பாக உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் பதுளையில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு இரண்டரை மற்றும் ஒரு வயதுடைய இரு குழந்தைகள் உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.