காதலியுடன் நீர் அருவிக்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை!!

480

மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை

நாவலப்பிட்டி – கலபொடை நீர் அருவியில் குளிக்க சென்ற நிலையில் காணாமல்போன பாடசாலை மாணவனைத் தேடும் பணிகளை கடற்படை சுழியோடிகள் இன்று ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் தனது காதலியுடன் கலபொடை நீர் அருவியை பார்க்க சென்றுள்ளதுடன் இருவரும் அருவிக்கு சுமார் 500 மீற்றர் தொலைவில் கீழே உள்ள ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

கம்பளை – போவல பிரதேசத்தை சேர்ந்த, கம்பளை விக்ரமபாகு கல்லூரியில் உயர்தர வகுப்பில் தகவல் தொழிநுட்பம் கற்று வந்த 18 வயதான மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கம்பளை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, தனது காதலியுடன் மாணவன், கலபொடை அருவியை பார்க்க சென்றுள்ளார்.

கலபொடை நீர் அருவிக்கு அருகில் உள்ள பிரதேசவாசிகள், நாவலப்பிட்டி பொலிஸார் இணைந்து நேற்று முழுவதும் காணாமல் போன மாணவனை தேடிய போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து உடலை தேடும் பணிகளை கடற்படையின் சுழியோடிகள் இன்று ஆரம்பித்துள்ளனர் என நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.