நீரில் மூழ்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு!!

349

மாணவன் சடலமாக மீட்பு

நாவலப்பிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று கடற்படையினரின் உதவியோடு மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த ஆழமான குழியொன்றில் இருந்தே கடற்படையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை விக்ரபாகு வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் கம்பள, போவள பகுதியை சேர்ந்த 18 வயதுடைய துஷார பிரதீப் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் பாதணி ஆற்றில் விழுந்ததாகவும் பாதணியை எடுப்பதற்கு முற்பட்ட போதே அவர் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் உயிரிழந்த இளைஞரின் காதலி வாக்கும்மூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இளைஞனும் அவரின் காதலியும் காலபொட ஆற்றில் நீராடி கொண்டிருந்தவேளை இளைஞனை நீர் ஆழமான பகுதிக்கு இழுத்து சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றதன் பின்னர், உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.