முல்லைத்தீவில் ஏற்பட்ட பெரும் சோகம் : மின்னல் தாக்கி இளைஞன் பரிதாபமாக பலி!!

1124

இளைஞன் பரிதாபமாக பலி

கிளிநொச்சி விஸ்வமடுப் பகுதியில் மின்னல் தாக்கி 17 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.  இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி, விஸ்வமடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கம் ஏற்பட்டதில் 17 வயது இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.

விஸ்வமடுவைச் சேர்ந்த த.தயானந்தன் (வயது 17) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் தற்போது ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடும் மின்னல் தாக்கம் காணப்படுவதுடன் யாழில் மின்னல் தாக்கம் காரணமாக மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.