மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

651

பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, வவுணதீவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் நேற்று பகல் உயிரிழந்துள்ளார். இலுப்படிச்சேனை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முழுவதும் மதுபோதையில் இருந்த நிலையில் வீட்டின் முன்னால் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப் பிரதேசத்தில் வடிசாராய பாவனை அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.