குண்டு வெடிப்பு

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 5 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





