மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி!!

850

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை வெடிப்பு சம்பவம் : 23 பேர் பலி..

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 160 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மேலும் இரண்டு குண்டுகள் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

-தமிழ்வின்-