இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் 29ம் திகதி ஆரம்பமாகும்!!

533

கல்வியமைச்சு விடுத்த அறிவித்தல்

இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 29ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இலங்கையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும், இன்றும் விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.