மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்கள் : கண்ணீரில் மட்டக்களப்பு!!

474

கண்ணீரில் மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள், படங்களுடனான கண்ணீர் அஞ்சலி பதாதைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் நாளான நேற்று முன்தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகம் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு சம்வங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் வெளிநாட்டவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இறுதியாக வந்த தகவலின் படி 321 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 38 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். அத்துடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.