யாழ்ப்பாணம் இணுவில் ஆலய வளாகத்தில் பரபரப்பு!!

231

இணுவில் ஆலய வளாகத்தில் பரபரப்பு

யாழ்ப்பாணம் இணுவில் ஆலயத்திற்கு அருகில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதியின் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குண்டு செயலிழக்கும் குழுவும் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

எனினும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

குறித்த பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினை சோதனை செய்த இராணுவத்தினர் அதனை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.