பரபரப்பான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

786

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்த மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது தீவிர சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேகத்திற்கிடமான வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பல பிரிவுகளாக பொலிஸ் படை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பல வீதிகள் மூடப்பட்டு சோதனையிடப்படுகிறது.

கொழும்பு மாத்திரமன்ற நாட்டின் முழு பகுதியும் தீவிர சோதனை உட்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.