கல்முனையில் வெடித்து சிதறிய 6 தற்கொலை குண்டுதாரிகள்!!

322

 

கல்முனை – சாய்ந்தமருதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

மோதல் காரணமாக படுகாயம் அடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேரக தெரிவித்துள்ளார்.