சந்தேகத்திற்கிடமான காரை கண்டுபிடித்த விமானப்படையின் மோப்ப நாய்!!

237

 

கொழும்பு பம்பலப்பிட்டி ஓஷன் டவர் கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவின் மர்லி என்ற மோப்ப நாய் கட்டிடத்தில் இருந்த இந்த காரை இன்று அடையாளம் கண்டுள்ளது.

தேடுதல் நடத்தப்பட்ட போது மர்லி என்ற இந்த மோப்ப நாய் காருக்கு அருகில் சென்று நின்று தொடர்ந்தும் மோப்பம் பிடித்துள்ளது. இதற்கு அமைய காரின் உரிமையாளர் உட்பட நான்கு பேரை விமானப்படையினர் கைது செய்து, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.