மட்டக்களப்பு குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் உயிரிழப்பு!!

1058

மட்டக்களப்பு, சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாவற்குடாவினை சேர்ந்த ரஞ்சித் சுரங்க நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கல்லடி – வேலூர் பகுதியை சேர்ந்த பிரசாந் கிருஜா எனும் 35 வயதுடைய பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்க என்பவரின் மனைவி குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவ்விரு உயிரிழப்புக்கள் மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 28ஆக அதிகரித்துள்ளது.